May 22, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டி பணம் பறித்ததாக இரு போக்குவரத்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

மிரட்டி பணம் பறித்ததாக இரு போக்குவரத்து போலீசார் விசாரணை

Share:

ஜோகூர், மார்ச் 14 -

பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் ரில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி சிங்கப்பூர் பிரஜையை மிரட்டி பணம் பறித்ததாக சந்தேகப்படும் இரண்டு போக்குவரத்து போலீசாரை ஜொகூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுக்குறித்து ஈரின் தியோ என்பர் முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவலாகி வருவதை தனது தரப்பு கண்டறிந்ததாக ஜொகூர் போலீஸ் தலைவர் கோமிசியனர் ம்.குமார் தெரிவித்தார்.

நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இரண்டு காணொளிகளை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை மிரட்டி பணத்தை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கும் அவ்விரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ம்.குமார் கூறினார்.

மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக அந்நபர்கள் மீது குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News