சிரம்பான், மார்ச்.25-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 264 ஆவது கிலோமீட்டரில் சிரம்பானுக்கு அருகில் அவசர வழித்தடத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேக மோட்டார் சைக்கிள் மோதியதில் 38 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்தின் கோரமான தாக்கத்தினால் அந்த சூப்பர் பைக் திடீரென தீப்பிடித்து முழுமையாக எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டதுடன் தீயையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








