வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு சராசரி 24 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM தெரிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை 15 லட்சம் வாகனங்களும், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 99 ஆயிம் வாகனங்களும், கிழக்கு கரையோர முதலாவது விரைவு சாலையை ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாகனங்களும், கிழக்கு கரையோர இரண்டாவது விரைவு சாலையை 61 ஆயிரம் வாகனங்களும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக LLM அறிவித்துள்ளது.
சீனப்புத்தாண்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் அதேவேளையில் நாளை வியாழக்கிழமையும், மறுநாள் வெள்ளிக்கிழமையும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இலவசமாகும்.








