சிலாங்கூர், மே 03-
சிலாங்கூரில் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதாக, மென்தெரி பெசார் அமிருதின் ஷாரி அறிவித்துள்ளார்.
தொழிலாளர் தினமான மே மாதம் 1ஆம் தேதி, பொதுச்சேவை ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிவிப்பிற்கு ஏற்ப, மாநில அளவிலும் சம்பளம் உயர்த்தப்படுவதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசின் நிதி நடைமுறைகளுக்கு ஏற்ப, மாநில அரசாங்கம் அந்நடவடிக்கையை எடுக்கும் என கூறிய அமிருதின் ஷாரி, சம்பள ஒருங்கிணைப்பு தொடர்பில், கூட்டரசு அரசாங்கத்தின் உத்தரவுக்கு தாம் காத்திருப்பதாகவும் கூறினார்.








