நெகிரி செம்பிலான், மலாக்கா கடற்பகுதியில் சேகரிக்கப்படும் சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்றும், சிப்பி உணவு வகையின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது என்றும் மீன்பிடி இலாகா அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் கடற்பகுதியில் குறிப்பாக போர்ட்டிக்சன் வட்டாரத்தில் சேகரிக்கப்பட்டும் சிப்பிகளில் Biotoxins எனப்படும் நச்சுத்தன்மையிலான அமில அளவு தொடர்ந்து அதிகமாக உள்ளது.
எனவே அந்த கடல் வாழ் உணவை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க இயலாது என்று மீன்பிடி இலாகாவின் தலைமை இயக்குநர் Adnan Hussain தெரிவித்துள்ளார்.
சிப்பிகளை சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் வட்டாரத்தை சேர்ந்த மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் Adnan Hussain எதிர்வினையாற்றினார்.








