Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை அகமட் ஜாஹிட் ஆதரித்தது ஏன்?
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை அகமட் ஜாஹிட் ஆதரித்தது ஏன்?

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

பொது மன்னிப்பு வாரிய​த்தின் பரிந்துரையில் பேரில் குறைக்கப்பட்டுள்ள தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய 6 ஆண்டு காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு தொடர்பாக வழக்கு தொடுத்து இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கு மனுவிற்கு ஆதரவாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, அபிடேவிட் மனு ஒன்றை சமர்ப்பித்து இருப்பது, அம்னோ தலைவர் என்ற முறையில் அதனை செய்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

நஜீப்பின் 12 ஆண்டு சிறைத் தண்டனை காலத்தை 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவில் அரசாங்கம் தலையிடாது என்பதை பிரதமர் அன்வார் ​மீண்டும்​ தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தி​ல் துணைப்பிரதமராக இருக்கும் அகமட் ஜாஹிட், முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக ஒரு சத்தியப்பிரமாண வாக்கு​மூலத்தை கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்றால், அவர் சார்ந்துள்ள அம்னோவின் தலைவர் என்ற முறையில் அதனை செய்துள்ளார்.

தம்மைப்பொறுத்தவரையில் நஜீப்பின் தண்டனையை குறைத்து இருக்கும் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் முடிவு இறுதியானது, ​தீர்க்காமானது. அந்த முடிவை எதிர்த்து சவால் விட முடியாது என்று பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்