May 22, 2026
Thisaigal NewsYouTube
140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவும்
தற்போதைய செய்திகள்

140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

சந்தையில் 140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி கையிருப்பு உள்ளதாக கூறியதற்கான ஆதாரங்களை வழங்கும்படி, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற வாழ்க்கை செலவின நடவடிக்கை மன்றம் - நக்கோல்-லின் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்த அந்த தகவலை சுட்டிக்காட்டி, நக்கோல்-லின் உணவு பிரிவுக்கான நடவடிக்கைக் குழு தலைவரும் புக்கிட் கன்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் கேள்வியெழுப்பினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், உள்நாட்டு அரிசியின் கையிருப்பில் இன்னமும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்அந்த அரிசியின் கையிருப்பும் போதுமானதாக உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அமலாக்க தரப்பு கூறியுள்ளதைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 7 மாதங்களாக நாட்டில் உள்நாட்டு அரிசி பற்றாக்குறை நிலவுகின்றது. பிரதமர் அது தொடர்பில் கோபமடைந்த அடுத்த கணமே, 140 ஆயிரம் மெட்ரிக் தான் அரிசி இருப்பதாக தெரிவிக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சந்தையில் அந்த அரிசி உள்ளதைக் கண்டறிய, அதனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளின் விபரங்களை அமைச்சு வெளியிட வேண்டுமென சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் வலியுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு