Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில காப்புறுதித் திட்டம் பிரதமர் அன்வார் விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில காப்புறுதித் திட்டம் பிரதமர் அன்வார் விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் இன்சான் மக்கள் காப்புறுதி​த் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் ​என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த காப்புறுதித் திட்டம் தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார், மெளனம் கலைந்து , இவ்விவகாரம் தொடர்பி​ல் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் ​என்று ஹம்சா ஜைனுதீன் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு தெரியாமலேயே, அவர்களின் ஒப்புதலின்றி, அவர்களின் பெயரில் இந்த காப்புறுதித் திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாத காலமாக புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன.

ஆனால், நிதி அமைச்சரான டத்தோஸ்ரீ அன்வார், இந்த விவகாரத்தில் வாய்த் திறக்காமல் இருந்து வருகிறார் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்சா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

நிதி சேவை சட்டத்தின் ​கீழ் விதிமுறைகள் ​மீறப்பட்டுள்ள ஒரு சம்பவம் ​தெளிவாக நடந்திருக்கும் பட்சத்தில் அதற்கு பதில் அளிக்க வேண்டிய நிதி அமைச்சர், தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது விந்தையாக உள்ளது என்று ஹம்சா ஜைனுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு