Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வெறும் 3.7 விழுக்காடுதானா?                                                         மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் கேள்வி
தற்போதைய செய்திகள்

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வெறும் 3.7 விழுக்காடுதானா? மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் கேள்வி

Share:

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 3.7 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்திற்கான இட ஒதுக்கீட்டு கோட்டாவில் பூமிபுத்ராக்களுக்கு 90 விழுக்காடு இடங்களையும் , பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களையும் அரசாங்கம் ஒதுக்கி வருவதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து விழுக்காடு இடங்களில் சீனர்களுக்கு 5.43 விழுக்காடும், இந்தியர்களுக்கு 3.72 விழுக்காடு இடங்களும் இதர இனத்தவர்களுக்கு 0.85 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ சிவராஜ் தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு மொத்தம் 30 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் இந்தியர்களுக்கு 3.72 விழுக்காடு இடங்கள் என்றால் ஆண்டுக்கு சராசரி 1,116 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்ஙகு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே எண்ணிக்கையில்தான் இந்திய மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

காரணம், மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
எனவே இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு நடப்புத் தேவைக்கு ஏற்ப 6 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை டத்தோ சிவராஜ் கேட்டுக்கொண்டார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து