Mar 20, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய பணியாளர்கள், முன்கூட்டியே நாளை வாக்களிப்பர்
தற்போதைய செய்திகள்

முக்கிய பணியாளர்கள், முன்கூட்டியே நாளை வாக்களிப்பர்

Share:

ஹுலு சிலாங்கூர், மே 06-

மே 11 ஆம் தேதி நடைப்பெறவிருக்கும் சிலாங்கூர், கோலா குபு பாரு தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு, மொத்தம் 625 போலீஸ் அதிகாரிகள், 238 இராணுவ வீரர்கள் உட்பட தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் ஆகியோர் முன்கூட்டியே நாளை செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.

Rejimen Semboyan Divisyen Ke-4 Infantri மற்றும்டேவான் செர்பாகுனா மக்தாப் போலிஸ் தி ராஜா மலேசியா ஆகிய இரண்டு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது. மேலும், மூன்று வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணியளவில் திறக்கப்பட்டு மாலை 5 மணியளவில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வாக்களிக்கும் நாளில் காலையில் நல்ல வானிலையும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆகவே, வாக்களிக்கவிருப்பவர்கள் இதை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அது வலியுறுத்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து