ஹுலு சிலாங்கூர், மே 06-
மே 11 ஆம் தேதி நடைப்பெறவிருக்கும் சிலாங்கூர், கோலா குபு பாரு தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு, மொத்தம் 625 போலீஸ் அதிகாரிகள், 238 இராணுவ வீரர்கள் உட்பட தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் ஆகியோர் முன்கூட்டியே நாளை செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.
Rejimen Semboyan Divisyen Ke-4 Infantri மற்றும்டேவான் செர்பாகுனா மக்தாப் போலிஸ் தி ராஜா மலேசியா ஆகிய இரண்டு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது. மேலும், மூன்று வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணியளவில் திறக்கப்பட்டு மாலை 5 மணியளவில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, வாக்களிக்கும் நாளில் காலையில் நல்ல வானிலையும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆகவே, வாக்களிக்கவிருப்பவர்கள் இதை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அது வலியுறுத்தியுள்ளது.








