தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான தகவலைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிவி3 தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி அஹ்மத் ஃபுவாத் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட கைதிர் அஹ்மத் என்ற அந்த முன்னாள் செய்தி ஆசிரியர், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, மலேசிய அதிகாரிகளின் துணையுடன் சபாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு 52 மில்லியன் லிட்டர் மானிய விலை டீசல் கடத்தப்பட்டதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான தகவலை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.








