Jun 30, 2026
Thisaigal NewsYouTube
டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு
தற்போதைய செய்திகள்

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

Share:

புடி மதானி மானிய திட்டத்தின் கீழ், டீசல் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரிங்கிட் உதவித் தொகையானது, 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது, புடி தனிநபருக்கான டீசல் மற்றும் வேளான் பொருள் திட்டங்களுக்கான பயனாளர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படுவதாக நிதியமைச்சு தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றமானது கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், டீசல் பயன்படுத்துவோரின் நிதிசுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News