Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காரில் போதைப்பொருளுடன் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

காரில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Share:

பேராக், மே 06-

பேராக், தைப்பிங், ஜாலான் மேடான் சிம்பாங்கில் உள்ள ஒரு காரில் 21 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் 41 வயது மீனவர் மற்றும் 47 வயது உணவக உதவியாளர் ஆகியோரை பேராக் போலீஸ்படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட காரில் சோதனை மேற்கொண்ட போது 262,275 வெள்ளி மதிப்பிலான 46 பிளாஸ்டிக் பொட்டலங்கள் உள்ளடங்கிய 21,037 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 20,000 போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று முகமட் யுஸ்ரி கூறினார்.

கைது செய்யப்பட்ட அவ்விருவரும் மே 9 ஆம் தேதி வரையில் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து