May 22, 2026
Thisaigal NewsYouTube
TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை

Share:

கோலா நெருஸ், மே 03-

TERENGGANU FC காற்பந்து விளையாட்டாளரான அக்யார் ராஷிட்டை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாக்கியுள்ளது குறித்து, போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கொள்ளையிடும் நோக்கத்திற்காக, 25 வயதுடைய அந்த ஆட்டக்காரர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

ஹரிமாவ் மலாயா விளையாட்டாளருமான அக்யார் ராஷிட், நேற்று இரவு மணி 8.30 அளவில், கோலா நெருஸ், கொங் பாடாக்கிலுள்ள காற்பந்து அரங்கில் பயிற்சிகளை முடித்த பிறகு, தனது வீட்டிற்கு திரும்பிய போது, வாகனத்திலிருந்து வந்திருந்த இருவர் அவரை தாக்கியுள்ளனர்.

அத்துடன், அவரது கைப்பேசி, பணம் முதலானவற்றை உள்ளடக்கிய கைப்பைப் பறித்துக்கொண்டு அவ்விருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அந்த தாக்குதலில் அக்யார் ராஷிட்டிற்கு தலை, இடது கால் மற்றும் கைப் பகுதி ஆகியவற்றில் காயங்கள் அஸ்லி முகமது நூர் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

Related News