May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கணவன்,மனைவி கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கணவன்,மனைவி கைது

Share:

பினாங்கு, மார்ச் 8 -

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பினாங்கு போலீசார், தஞ்ஜோங் தோக்கோங் மற்றும் பினாங்கு மாநகர் ஆகிய இரு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் கணவன், மனைவி உட்பட நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.

கணவன், மனைவிக்கு அப்பாற்பட்டு, கைது செய்யப்பட்ட இதர இரண்டு நபர்கள், போதைப்பொருளை விநியோகிப்பாளர்கள் ஆவர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்துக் காவ் கோக் சின் தெரிவித்தார்.

28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்று இன்று ஜார்ஜ்டவுனில் பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News