Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அதிகாரிகள் நாளை வரையில் ரிமாண்டில் நீடிக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு அதிகாரிகள் நாளை வரையில் ரிமாண்டில் நீடிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 08-

ஜொகூர் பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் -ரில் நபர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் இரண்டு போலீஸ் அதிகாரிகளை நாளை வரையில் தடுப்பு காவலில் வைப்பதற்கு நீடிக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் தொடர்ந்து ரிமாண்டில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஆர். ஷாலினி -யினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் குற்றவியல் சட்டம் 385 பிரிவின் கீழ் அந்நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

முன்னதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரையில் ரிமாண்டில் இருந்ததாகவும் மேலும் நாளை வரையில் தடுப்பு காவலில் வைக்கப்படவுள்ளதாகவும் ராவுப் செலாமாட் விளக்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் -ரில் 32 மற்றும் 33 வயதுடைய அவ்விருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டிருந்ததாக முன்பு ஜொகூர் மாவட்ட போலீஸ் தலைவர் கொமிசியோனிற் எம் குமார் கூறியிருந்தார்.

Related News