மூவார், செப்டம்பர்.02-
பள்ளி ஒன்றின் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிக்கு உதவி கொண்டு இருந்த ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 9.53 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் சாயாங்கில் நிகழ்ந்தது.
53 வயதுடைய அந்த நபர், மின்சாரம் தாக்கி, முதல் மாடியிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்க வந்த சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.








