Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22 இல் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போ​லீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்​கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக போ​லீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் ​சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பில் காப்பார் வட்டாரத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை பிடிப்பதற்கு ​தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

சூடுப்பட்டு இற​ந்த நபர் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 12 குற்ற​ச்செயல்கள் பதிவை கொண்டுள்ளதாக விஜயராவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News