Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22 இல் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போ​லீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்​கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக போ​லீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் ​சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பில் காப்பார் வட்டாரத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை பிடிப்பதற்கு ​தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

சூடுப்பட்டு இற​ந்த நபர் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 12 குற்ற​ச்செயல்கள் பதிவை கொண்டுள்ளதாக விஜயராவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு