May 22, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை டிஏபி களமிறக்கும்
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை டிஏபி களமிறக்கும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர்,கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், டிஏபி கட்சி மலாய் வேட்பாளரை களமிறக்குவதற்கான சாத்தியம் உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில், ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர் முன்னணியில் உள்ளதாக, டிஏபி-யைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

மலாய் வாக்காளர் விகிதம் 50 விழுக்காடாக உள்ளதால், வரும் தேர்தலில் மலாய் வேட்பாளர் முன்னிறுத்தப்படலாம். இதர வேட்பாளர்களைவிட சரிபா அங்குள்ள மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக திகழ்வதாக கூறிய அவர், டிஏபி-யின் முடிவுக்கும் அறிவிப்புக்கும் காத்திருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனிடையே, கோல குபு பாரு இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு, மலாய் கட்சியிலிருந்து ஒருவர் உட்பட மொத்தம் ஐவரின் பெயரை பேரிக்காதான் நசியனால் பட்டியலிட்டுள்ளதாக, கெராக்கான் கட்சியை சேர்ந்த ஒருவர் நேற்று கூறியிருந்தார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி