Mar 22, 2026
Thisaigal NewsYouTube
3 மணி நேரம் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட மாணவர் வெப்பவாதத்திற்கு இலக்கான சம்பவம்; பாதிக்கப்பட்டவர் தரப்பில் அதிகாரப்பூர்வ புகாரைக் கோருகின்றது, SUHAKAM
தற்போதைய செய்திகள்

3 மணி நேரம் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட மாணவர் வெப்பவாதத்திற்கு இலக்கான சம்பவம்; பாதிக்கப்பட்டவர் தரப்பில் அதிகாரப்பூர்வ புகாரைக் கோருகின்றது, SUHAKAM

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 04-

பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு தண்டனையை வழங்கும் விதமாக 3 மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக புகாரளிக்க வேண்டுமென, மனித உரிமை ஆணையம் – SUHAKAM வலியுறுத்தியுள்ளது.

அந்த புகாருடன் போதிய ஆதாரங்கள் வழங்கப்பட்டால், தங்கள் தரப்பில் ஆக்கப்பூர்வமான விசாரணையை மேற்கொள்ள அது பெரிதும் உதவும் என அவ்வாணையம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே, போலீஸின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து SUHAKAM அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு கேள்வி கேட்டு கடிதத்தை அனுப்ப முடியும்.

ஆயினும், அவ்விவகாரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை உறுதிபடுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை.

இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் தங்களது பரிந்துரைகளை ஏற்று, அமலாக்கத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக SUHAKAM கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அம்பாங்-ங்கிலுள்ள ஓர் ஆரம்ப்பள்ளியின் திடலில், 3 மணி நேரம் திடலில் நிற்கவைக்கப்பட்ட 5ஆம் ஆண்டு ஆண் மாணவர், வெப்பவாத தாக்குதலுக்கு இலக்கானதால், AMPANG மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நரம்பியல் பாதிப்புக்கு இலக்கான அம்மாணவர், உடற்பேறு குறைந்தவர் என்ற நிலைக்கு ஆளானதாக, அவரது பெற்றோர் போலிசில் புகார் அளித்தனர்.

அச்சம்பவம் குறித்து SUHAKAM தாமாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அதன் முன்னாள் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் நேற்று வலியுறுத்தியிருந்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி