Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் பாலியல் தொந்தரவுக்கு இலக்கானவர்கள் புகாரளிக்க கோரிக்கை
தற்போதைய செய்திகள்

ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் பாலியல் தொந்தரவுக்கு இலக்கானவர்கள் புகாரளிக்க கோரிக்கை

Share:

ஈப்போ, ஏப்ரல் 19-

பேராக், ஈப்போ, ராஜா பெர்மை சூரி பைனுன் மருத்துவமனையில், பாலியல் தொந்தரவுகளுக்கும் மிரட்டல்களுக்கும் இலக்கானதாக கூறப்படும் மருத்துவ பணியாளர்கள் அது குறித்து போலீசில் புகாரளிக்கும்படி, மாநில சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு உதவக்கூடிய ஆதாரம் மற்றும் சாட்சிகளை கட்டாயம் முன்வைக்க வேண்டுமென அம்மாந்நில சுகாதார துறையின் இயக்குநர் டாக்டர் பெய்சுல் இட்ஸ்வான் முஸ்தபா தெரிவித்தார்.

இதற்கு முன்பு, மருத்துவ பணியாளர்கள் பாலியல் தொந்தரவுக்கு இலக்காவதாக வெளியாகியிருந்த மொட்டை கடிதம் குறித்து சுகாதார அமைச்சின் உயர்நெறி பிரிவு விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்துள்ளது.

இருந்த போதிலும், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அற்ற சூழலை ஏற்படுத்தும் இலக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினர் அது குறித்து போலீசில் புகாரளிப்பது அவசியம்.

அது தவிர, பணியிட பகடிவதை சம்பவங்களால் பாதிக்கப்படும் பணியாளர்கள், MyHelp KKM எனும் அமைச்சின் அகப்பக்கத்தில் புகாரளிக்கலாம் என டாக்டர் பெய்சுல் இட்ஸ்வான் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்