அம்னோவில் எஞ்சிய உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டிய தருணம் வந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மகமது கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில் ஜோகூர் இடைத் தேர்தல்களில் அம்னோ உறுப்பினர்கள், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று இரவு பூலாய் நாடாளுமன்த் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுல்கிஃப்லி ஜாபர் ஐ ஆதரித்து, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட துன் மகாதீர், இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று துன் மகாதீர் உறுதி அளித்தார்.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்


