அம்னோவில் எஞ்சிய உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டிய தருணம் வந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மகமது கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில் ஜோகூர் இடைத் தேர்தல்களில் அம்னோ உறுப்பினர்கள், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று இரவு பூலாய் நாடாளுமன்த் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுல்கிஃப்லி ஜாபர் ஐ ஆதரித்து, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட துன் மகாதீர், இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று துன் மகாதீர் உறுதி அளித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


