கோல பிலா, ஜூன்.16-
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் காரைச் செலுத்திய பெண்மணி ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் சிரம்பான் – கோல பிலா சாலையின் 30 ஆவது கிலோ மீட்டலில் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நிகழ்ந்தது.
இதில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த 21 வயது பெண்மணி உயிரிழந்ததாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாஃபா ஹுசேன் தெரிவித்தார்.








