இரண்டு வாரங்களுக்கு முன்பு, சக நாட்டைச் சேர்ந்த ஒருவரை வெட்டி கொலை செய்ததாக வங்காளதேச ஆடவர் ஒருவர், கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
Mohammad மொகுல் ஹுசெயின் என்ற 34 வயதுடைய அந்த வங்காளதேச ஆடவர், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் லெங்கோங், ஜாலான் குவாக், பெக்கான் குவாக் என்ற இடத்தில் வாழைத் தோட்டத்தில் ஹொஸ்ஸென் முஹமாட் மொனோவார் என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் முஹமாட் சஸ்மீர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த வங்காளதேசியிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கில் வங்காளதேச மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


