Mar 18, 2026
Thisaigal NewsYouTube
12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்

Share:

செராஸ், மார்ச் 8 -

செராஸ் சில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 12 ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

நேற்று மதியம் 1:52 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரின்டென்டன் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 12 வயதிற்கு உட்பட்ட உள்ளூர் சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே உள்ள புல்வெளியில் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை கண்டறிந்ததாக ரிட்சுவான் காலிட் கூறினார்.

பிறகு அந்த சிறுவன் உயிரிழந்ததை கென்சேலர் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக ரிட்சுவான் காலிட் நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இது திடீர் மரணமே என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் விவரித்தார்.

Related News

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது