May 22, 2026
Thisaigal NewsYouTube
அல்லா சொல் கொண்ட காலுறை தொழிற்சாலையின் உரிமம் ரத்து
தற்போதைய செய்திகள்

அல்லா சொல் கொண்ட காலுறை தொழிற்சாலையின் உரிமம் ரத்து

Share:

பத்து பஹாத்- மார்ச் 21

அல்லா சொல் கொண்ட காலுறை விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, அதனை விநியோகித்ததாக கூறப்படும் ஜோகூர்-ரிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் உரிமத்தை பத்து பஹாத் நகராண்மைக் கழகம் ரத்து செய்துள்ளது.

பத்து பஹாத், ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டையிலுள்ள க்ஸின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் அதற்கான நோட்டீஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்-ரில் இஸ்லாத்தின் புனிதம் காக்கப்பட வேண்டுமென அதன் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாய்ல்-லின் உத்தரவுக்கு தாங்கள் முழு ஆதரவை வழங்குவதாகவும் அறிக்கை ஒன்றில் அக்கழகம் கூறியிருந்தது.

நேற்று காலை 11.30 மணியளவில் பத்து பஹாத் இஸ்லாமிய சமயத் துறையினரும் நகராண்மைக் கழகம் உறுப்பினரும் அப்பகுதியிலுள்ள KK சூப்பர்மார்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் கடைகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.

ஆயினும், அவற்றில் சர்ச்சைக்குரிய காலுறை ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்