Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது

Share:

மலாயாவில் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்ணாக, வீர மங்கையாக பார்க்கப்பட்ட சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவிருக்கிறது. .

1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஈப்போவை கைப்பற்றிய ஜப்பானியர்கள், அங்கு பலரை கொன்று குவித்த போது, அதிலிருந்து தப்பிய பலருக்கு ஈப்போவிற்கு அருகில் உள்ள பாபான் என்ற ஒரு சிற்றூரிலில் ரகசியமாக மருத்துவ சிகிச்சையை அளித்து, உதவிப் புரிந்தவர் ஒரு தேர்ச்சிப் பெற்ற தாதியரான சிபில் கார்த்திகேசு ஆவார்.

ஒரு மருத்துவரான தனது கணவர் கார்த்திககேசுவுடன் இணைந்து பலரின் உயிரை காப்பாற்றிய சிபில் கார்த்திகேசுவின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக வருவதாக அதன் தயாரிப்பாளர் சங்கீதா கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் கலந்து தயாரிக்கப்படவிருக்கும்சிபில் கார்த்திகேசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் நிறைவுப்பெற்று, அடுத்த ஆண்டு வெள்ளித் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து