Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

கோல குபு பாரு, மே 03-

வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் வாக்காளர்களில் குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தவுடனே அப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை போலீஸ் துறை தொடங்கிவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியொன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலகுபு பாருவில் உள்ள அரச மலேசிய போலீஸ் படையின் அகாடாமியில் இன்று நடைபெற்ற ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைபுடின் இதனை குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தினத்தன்று பொது மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் போது எவ்வித அச்சமும் கொள்ள அவசியமில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதில் போலீஸ் துறை மிகுந்த விழிப்புணர்வுடன் கடமையாற்றுவர் என்று சைபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்