Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

கோல குபு பாரு, மே 03-

வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் வாக்காளர்களில் குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தவுடனே அப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை போலீஸ் துறை தொடங்கிவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியொன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலகுபு பாருவில் உள்ள அரச மலேசிய போலீஸ் படையின் அகாடாமியில் இன்று நடைபெற்ற ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைபுடின் இதனை குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தினத்தன்று பொது மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் போது எவ்வித அச்சமும் கொள்ள அவசியமில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதில் போலீஸ் துறை மிகுந்த விழிப்புணர்வுடன் கடமையாற்றுவர் என்று சைபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து