Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அந்த திட்டத்திற்கு நஜீப் தகுதி பெறவில்லை
தற்போதைய செய்திகள்

அந்த திட்டத்திற்கு நஜீப் தகுதி பெறவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 -

நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாக சிறைவாசத் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை வீட்டுத் தடுப்புக்காவலில் வைக்கும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தகுதி பெறவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னாசுடியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறைவாசத் தண்டனையை கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இந்த சிறப்புத் திட்டத்திற்கு தகுதி பெறுகின்றனர் என்று அமைச்சர் விளக்கினார்.

4 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனை காலத்தை கொண்டுள்ள சிறைக் கைதிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கான திட்டத்திற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை புத்ராஜெயா அறிவித்து இருந்தது.

இந்த திட்டம், நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்காக உத்தேசிக்கப்படவில்லை. மாறாக, சிறைச்சாலைகளில் கைதிகள் இட நெரிசல் காரணமாக முன்மொழிப்பட்டுள்ளது என்று அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின்விளக்கம் அளித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்