May 22, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மோனோரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நான்கு மோனோரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மே 08-

கோலாலம்பூர் மாநகரில் மிக பரபரப்பான சாலையான ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுள்ள பகுதியில் கோன்கோர்ட் ஹோட்டல் முன்புறம் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நான்கு மோனேரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் பயணிகளின் பயணங்களை சீராக வழிவகுத்திட மாற்றுச் சேவையை பொதுமக்களுக்கு அமல்படுத்திருப்பதாக ரேப்பிட் ரயில் Sdn Bhd நிறுவனம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்துள்ளது.

மோனோரல் புக்கிட் நானாஸ், மோனோரல் ராஜா சூலான், மோனோரல் புக்கிட் பிந்த்தாங் உட்பட மோனோரல் இம்பி ஆகிய நான்கு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், மாற்று சேவையை பயன்படுத்தி பயணிகள் தங்களின் பயணத்தை தொடருவதற்கு பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கிடையே இலவச பேருந்து சேவையை வழங்கியிருப்பதாக ரேப்பிட் ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

Related News