Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் வாகனத்தை மோதி இளைஞர் மரணம்
தற்போதைய செய்திகள்

போலீஸ் வாகனத்தை மோதி இளைஞர் மரணம்

Share:

மலாக்கா, ஏப்ரல் 11-

மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் கங்சா-கெசாங் டுரியான் துங்கால்-லில் சட்டவிரோத பந்தயத்தை முறியடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தை மோதிய 18 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார். நேற்று அதிகாலை மணி 2.56 அளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

போலீஸ் வாகனத்தை மோதி பல மீட்டர் தூரத்தில் தூக்கியெறியப்பட்ட முஹம்மத் கயிருள் பசாஹ்ரி கீழே விழுந்ததில், உடம்பில் பல பகுதிகளில் பலத்த காயத்திற்கு இலக்கானார். பிறகு, மலாக்கா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸ் அவரது வாகனத்தில் வேண்டுமென்றே மோதியதைப் போன்று வெளியான காணொளி குறித்து பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

37 வயதுடைய ரோந்து போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் கும்பல், அதிக இரைச்சலை ஏற்படுத்தி தொந்தரவை வழங்குவதாக, பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையிலேயே அவர் அவ்விடத்திற்கு சென்றதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சய்னோல் சமாஹ் கூறினார்.

இருப்பினும், அந்த விபத்து குறித்து நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்த சய்னோல் சமாஹ், அது தொடர்பில் தகவலறிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்