கெடா, மே 08-
தனது சகோதரரின் வீட்டிற்கு புறப்படுவதற்கு தடங்காட்டியை பயன்படுத்தி பயணித்த போது, அதன் சேவை துண்டிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுமார் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக திரும்புவதற்கு பாதை தெரியாமல் தொலைந்து போனார்.
இன்று நள்ளிரவு 1 மணியளவில் சுங்கை லாலாங்கிலிருந்து சுங்கை பெட்டாணிக்கு பாதிக்கப்பட்ட 32 வயது ஆடவர் ஹோண்டா RS மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, தடங்காட்டியின் சேவை துணிக்கப்பட்டதால் திரும்புவதற்கு பாதை தெரியாமல் ஃபெல்டா டெலோய் கானான்- னிலுள்ள ரப்பர் மற்றும் செம்பனை தோட்டத்தில் சோர்வற்ற நிலையில் கண்டறியப்பட்டார்.

இன்று காலை 7 மணியளவில் பாதிக்கப்பட்ட ஆடவரிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை அடுத்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிக் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.
பிறகு, சோர்வடைந்து, உடலில் பலமில்லாமல் காணப்பட்ட அவ்வாடவர்டெலோய் தீமுர்சி கிச்சையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சுல்கைரி மாட் கூறினார்.








