Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தங்கம் கொள்ளை  மூன்று கொள்ளையர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

தங்கம் கொள்ளை மூன்று கொள்ளையர்கள் பிடிபட்டனர்

Share:

கோல கங்சாரில் நகைக்கடை ஒன்றின் முன்புறம் நின்று கொண்டு இருந்த காருக்குள் இருந்து 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இக் கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் மூன்று சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர்.

20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் கொள்ளை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக கோலகங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஓமார் பக்தியார் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் ஷா ஆலாமில் ஓர் இடத்தில் அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் பிடிபட்டனர். அந்த மூவரும் இன்று கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றதாக ஏசிபி ஓமார் பக்தியார் குறிப்பிட்டார்.

நேற்று காலை 11.22 மணியளவில் கோலகங்சாரில் நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை ஒப்படைப்பதற்காக காரில் வந்து இறங்கிய இரு தங்க விற்பனையாளர்களை மடக்கிய கும்பல் ஒன்று, பாராங்கத்தி, சுத்தியலைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

சுமார் 30 வயதுடைய அக்கடையின் பணியாளர் என்று நம்பப்படும் ஒருவர் காரிலிருந்து கீழே இறங்கியதும் நடத்தப்பட்ட இந்த கொள்ளை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் வேட்டையில் அந்த மூவரும் ஷா ஆலாமில் பிடிபட்டதாக ஏசிபி ஓமார் பக்தியார் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து