Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது
தற்போதைய செய்திகள்

சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது

Share:

கெந்திங் ஹைலான்ஸ் ஏப்ரல் 7 -

கெந்திங் ஹைலன்ஸ்சில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் குறித்து புகார் கிடைக்க பெற்றதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டெடன் சைஹாம் மொஹாமாட் காஹார் தெரிவித்தார்.

சண்டையில் 23 வயது முதல் 50 வயதுடைய மொத்தம் 10 நபர்கள் ஈடுபட்டதாக சைஹாம் மொஹமாட் கூறினார்.

கருத்து வேறுபாடின் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் ரிமாண்ட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சைஹாம் மொஹாமாட் இன்று குறிப்பிட்டார்.

Related News