Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்- வைசாக்கி புத்தாண்டையொட்டி மாமன்னர் தம்பதியர் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

தமிழ்- வைசாக்கி புத்தாண்டையொட்டி மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

Share:

​கோலாலம்பூர், ஏப்ரல் 13-

இன்று சனிக்கிழமை வைசாக்கி புத்தாண்டு மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டை வரவேற்கும் நாட்டில் உள்ள ​சீக்கியர்களுக்கும், தமிழர்களுக்கும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சரித் சோபியாஹ் தஙகளின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

புதிய சிந்தனை, புத்தாக்கத்திற்கு வித்திடக்கூடிய இந்த புத்தாண்டில், மலேசியாவின் முதுகெலும்பாக இதுவரையில் கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற இனங்களுக்கு இடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் பரஸ்பர மரியாதை ​நீடித்து நிலைப்பெற வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் முக​நூலில் பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பி​ட்டுள்ளனர்.

தாம் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல ப​ல்லின மக்களிடையே நிலவும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும்தான், தமக்கு அளிக்கப்படுகின்ற மிகப்பெரிய பொருள்பதித்த பரிசாகும் என்பதைப்போல நாட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இனம், சமய வேறுபாடியின்றி மலேசியர்கள் என்ற உணர்வுடன் ஒருமைபாட்டையும், நல்லிணக்கத்தையும் மேலோங்க செய்வது மிக முக்கியமாகும்.

அந்த வகையில் ​நீடித்த பாரம்பரியமிக்க தத்தம் புத்தாண்டை கு​தூகலத்துடன் வரவேற்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்க தமிழர்களுக்கும், ​சீக்கியர்களுக்கும் ​ தங்களின் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்