கிள்ளான், மே 04-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நிறுவனம் ஒன்றின் வாகன ஓட்டுநரை கிள்ளான் உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்தது.
தன் வசம் methamphetamine வகையை சேர்ந்த போதைப்பொருளை வைத்திருந்ததாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கிள்ளான், தாமான் கிள்ளான்- கை சேர்ந்த ரகு கிருஷணன் என்ற அந்த வாகன ஓட்டுநர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் ரகு கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி அஸ்மி அப்துல்லா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கிள்ளான், தாமான் கிள்ளான் ஜெயா-வில் 182.1 கிராம் methamphetamine மற்றும் 3.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்ததாக 44 வயது ரகு கிருஷ்ணன், 1952 ஆம் ஆண்டு அபாயரக போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








