ஜொகூர்,பிப்.2
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று உள்ளூர் பெண்கள் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் கே. குமார் தெரிவித்தார்.
மூன்று உள்ளூர் பெண்களுடன் 5 தாய்லாந்துப் பெண்கள், சீனா மற்றும் வியட்நாமை சேர்ந்த தலா ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர்பாருவில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 26 க்கும் 56 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் 10 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.








