மிக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு, சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் செம்பனைத் தோட்டத்தில் தூக்கி எறியப்பட்ட நெகிரி செம்பிலான்,தம்பினைச் சேர்ந்த 24 வயது தர்வீன் ராஜ் உடலில் 18 ஆழமான வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளன என்பது சவப்பரிசோதனை அறிக்கையில் கண்டு தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதத்தினால் தர்வீன் ராஜ் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை அடையாளம் தெரியாமல் ஆக்குவதற்கு கொலையாளிகள் அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இந்திய இளைஞரின் மரபணு சோதனைக்காக போலீசார் தற்போது காத்திருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனில் சமாஹ் தெரிவித்துள்ளார். தமது சகோதரருடன் படம் பார்ப்பதற்காக கடந்த செப்டபம்ர் 9 ஆம் தேதி வெளியே சென்ற தர்வீன் ராஜ் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தர்வீன் ராஜ் சடலம் அழுகிய நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மலாக்கா,புலாவு செபாங் என்ற இடத்தில் செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


