மிக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு, சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் செம்பனைத் தோட்டத்தில் தூக்கி எறியப்பட்ட நெகிரி செம்பிலான்,தம்பினைச் சேர்ந்த 24 வயது தர்வீன் ராஜ் உடலில் 18 ஆழமான வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளன என்பது சவப்பரிசோதனை அறிக்கையில் கண்டு தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதத்தினால் தர்வீன் ராஜ் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை அடையாளம் தெரியாமல் ஆக்குவதற்கு கொலையாளிகள் அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இந்திய இளைஞரின் மரபணு சோதனைக்காக போலீசார் தற்போது காத்திருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனில் சமாஹ் தெரிவித்துள்ளார். தமது சகோதரருடன் படம் பார்ப்பதற்காக கடந்த செப்டபம்ர் 9 ஆம் தேதி வெளியே சென்ற தர்வீன் ராஜ் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தர்வீன் ராஜ் சடலம் அழுகிய நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மலாக்கா,புலாவு செபாங் என்ற இடத்தில் செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


