மிக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு, சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் செம்பனைத் தோட்டத்தில் தூக்கி எறியப்பட்ட நெகிரி செம்பிலான்,தம்பினைச் சேர்ந்த 24 வயது தர்வீன் ராஜ் உடலில் 18 ஆழமான வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளன என்பது சவப்பரிசோதனை அறிக்கையில் கண்டு தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதத்தினால் தர்வீன் ராஜ் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை அடையாளம் தெரியாமல் ஆக்குவதற்கு கொலையாளிகள் அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இந்திய இளைஞரின் மரபணு சோதனைக்காக போலீசார் தற்போது காத்திருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனில் சமாஹ் தெரிவித்துள்ளார். தமது சகோதரருடன் படம் பார்ப்பதற்காக கடந்த செப்டபம்ர் 9 ஆம் தேதி வெளியே சென்ற தர்வீன் ராஜ் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தர்வீன் ராஜ் சடலம் அழுகிய நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மலாக்கா,புலாவு செபாங் என்ற இடத்தில் செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்


