Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் எம்.பி.யின் பரிந்துரையை சாடினார் ஜாயிட் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

பூலாய் எம்.பி.யின் பரிந்துரையை சாடினார் ஜாயிட் இப்ராஹிம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 -

பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகத் தளங்களில் பணியாற்றும் முஸ்லிம் பணியாளர்கள், பீர் போன்ற மதுபான டின்கள் அல்லது பாட்டில்களை தொடாமல் இருக்க வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அத்தகைய வர்த்தகத் தளங்களில் மதுபான வகைகளை கையாளுதற்கு சுயசேவைக்குரிய வென்டிங் இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ள Pulai எம்.பி. சுஹாய்சான் காயாட் டை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்துக் சாயிட் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.

முஸ்லிம் பணியாளர்கள், தொழில் நிமித்தமாக மதுபான பாட்டில்கள் அல்லது டின்களை தொடக்கூடாது என்றால், பீர் பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லோரிகளின் ஓட்டுநர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ எந்த மலாய்க்காரரும் வேலையில் அமரக்கூடாது என்று அந்த சட்டத்துறை முன்னாள் அமைச்சர் எதிர்வினையாற்றினார்.

இதேபோன்று அரச மலேசிய சுங்கத்துறையில் கடமையாற்றும் மலாய்க்கார அதிகாரிகளும் தங்கள் சோதனையின் போது மதுபான போத்தல்களை பரிசோதிக்க அனுமதிக்கக்கூடாது.

ஹலால் தொழில் துறை அல்லாத அத்தகைய அரசாங்கப்பணிகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா ? என்று ஒரு மிதவாதியான டத்துக் சாயிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
உலகமே நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் குறுகிய சிந்ததனையில் உழன்று கொண்டு இருப்பதை விடுத்து, பரந்து சிந்தனையும், தெளிவும் நமக்கு வேண்டும் என்று பூலாய் எம்.பி.க்கு டத்துக் சாயிட் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்