போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா, பி.யு.என்.பி எனப்படும் பெர்படானான் உசாஹவான் நேசனல் பெர்ஹட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம் இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அந்த கழகத்தின் நிர்வாக அதிகாரி இஸ்வான் ஜைனுதீன் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, பி.யு.என்.பி தலைவர் பதவியிலிருந்து விலகிய டத்தோ அகமது நஸ்லான் இட்ரிஸ் க்கு பதிலாக முன்னாள் ஐ.ஜி.பி. அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார். அரச மலேசியப் போலீஸ் படையின் 13 ஆவது போலீஸ் தலைவராக பதவி வகித்த டான் ஸ்ரீ அக்ரில் சானி, கடந்த மே 4 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


