போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா, பி.யு.என்.பி எனப்படும் பெர்படானான் உசாஹவான் நேசனல் பெர்ஹட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம் இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அந்த கழகத்தின் நிர்வாக அதிகாரி இஸ்வான் ஜைனுதீன் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, பி.யு.என்.பி தலைவர் பதவியிலிருந்து விலகிய டத்தோ அகமது நஸ்லான் இட்ரிஸ் க்கு பதிலாக முன்னாள் ஐ.ஜி.பி. அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார். அரச மலேசியப் போலீஸ் படையின் 13 ஆவது போலீஸ் தலைவராக பதவி வகித்த டான் ஸ்ரீ அக்ரில் சானி, கடந்த மே 4 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


