போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா, பி.யு.என்.பி எனப்படும் பெர்படானான் உசாஹவான் நேசனல் பெர்ஹட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம் இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அந்த கழகத்தின் நிர்வாக அதிகாரி இஸ்வான் ஜைனுதீன் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, பி.யு.என்.பி தலைவர் பதவியிலிருந்து விலகிய டத்தோ அகமது நஸ்லான் இட்ரிஸ் க்கு பதிலாக முன்னாள் ஐ.ஜி.பி. அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார். அரச மலேசியப் போலீஸ் படையின் 13 ஆவது போலீஸ் தலைவராக பதவி வகித்த டான் ஸ்ரீ அக்ரில் சானி, கடந்த மே 4 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


