தனது அடாவடித்தனமான பேச்சினால் பிறரை முக சுளிக்க வைக்கும் நபராக பார்க்கப்படும் Papagoma என்று அழைக்கப்படும் Muhammad Azri Wan Deris, கைது செய்யப்பட்டு இருப்பதை போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain உறுதிபடுத்திள்ளார்.
மாமன்னருக்கு எதிராக நிந்தனை தன்மையில் காணொளி வெளியிட்டதற்காக புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த சர்ச்சைக்குரிய நபர், இன்று மதியம் கோலாலம்பூர் Setapak-கில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
41 வயதுடைய Papagoma, 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று Tan Sri Razarudin தெரிவித்தார்.








