Jan 20, 2026
Thisaigal NewsYouTube
லோ மேல்முறையீட்டு வழக்கில் ஜுலை 31 இல் விசாரணை
தற்போதைய செய்திகள்

லோ மேல்முறையீட்டு வழக்கில் ஜுலை 31 இல் விசாரணை

Share:

மதம் மாறிய தமது கணவர் எம். நாகேஸ்வரனால் தம்முடைய அனுமதியின்றி தமது மூன்று பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தனித்து வாழும் தாயாரான லோ சியூவ் ஹொங் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில விசாரணை தேதிகள் வரும் ஜுலை 31 ஆம் தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிறது.

இன்று காலையில் புத்ராஜெயாலில் அப்பீல் நீதிமன்ற துணை பதிவதிகாரி மரியாம் ஹசானா ஒத்மான் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் மேல்முறையீட்டிற்கான குறிப்புகள் முறைப்படுத்தப்பட்டன.
தமது மூன்று பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, அதனை சட்ட ரீதியாக சவால் விடுவதற்கு லோ தொடுத்திருந்த வழக்கு மனுவை கடந்த மே 11 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதின்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் லோ, மேல்முறையீடு செய்துள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையில தற்போது உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமாக தீர்ப்புக்காக தாங்கள் காத்திருப்பதாக துணை பதிவதிகாரியிடம் தெரியப்படுத்தியுள்ளதாக லோவின் வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு