May 22, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் புகைப்படம், அனைத்து நுழைவாயில்களிலும் விநியோகிப்பு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் புகைப்படம், அனைத்து நுழைவாயில்களிலும் விநியோகிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் ஒன்றில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகிக்கும் நபரின் புகைப்படம், நாட்டிலுள்ள அனைத்து நுழையங்களிலும், அண்டை நாட்டு அமலாக்க தரப்புகளிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் 38 வயது ஹபிசூல் ஹராவி என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அந்நபர் இன்னமும் நாட்டினுள் பதுங்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமான வழிகளில் தப்பித்துச்செல்வதை தடுக்க, நாட்டின் எல்லைப் பகுதிகளிலுள்ள சாலைகள் உட்பட அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அந்த நபரை போலீஸ் கைது செய்யும் எனவும் ரசாருதீன் ஹுசைன் கூறினார். நேற்று நள்ளிரவு மணி 1.30க்கு சம்பவ இடத்தில் அவ்வாடவர் தனது மனைவியை நோக்கி இருமுறை சுட்டத்தில், அவரது பாதுகாவலரான உள்நாட்டு ஆடவர் கடும் காயங்களுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி