Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் புகைப்படம், அனைத்து நுழைவாயில்களிலும் விநியோகிப்பு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் புகைப்படம், அனைத்து நுழைவாயில்களிலும் விநியோகிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் ஒன்றில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகிக்கும் நபரின் புகைப்படம், நாட்டிலுள்ள அனைத்து நுழையங்களிலும், அண்டை நாட்டு அமலாக்க தரப்புகளிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் 38 வயது ஹபிசூல் ஹராவி என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அந்நபர் இன்னமும் நாட்டினுள் பதுங்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமான வழிகளில் தப்பித்துச்செல்வதை தடுக்க, நாட்டின் எல்லைப் பகுதிகளிலுள்ள சாலைகள் உட்பட அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அந்த நபரை போலீஸ் கைது செய்யும் எனவும் ரசாருதீன் ஹுசைன் கூறினார். நேற்று நள்ளிரவு மணி 1.30க்கு சம்பவ இடத்தில் அவ்வாடவர் தனது மனைவியை நோக்கி இருமுறை சுட்டத்தில், அவரது பாதுகாவலரான உள்நாட்டு ஆடவர் கடும் காயங்களுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்