May 22, 2026
Thisaigal NewsYouTube
இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

வெட்டுக்கத்தி மற்றும் பேஸ்பால் மட்டைகளை பயன்படுத்தி, 11 பேரை அச்சுறுத்தி, அவர்களுக்கு சொந்தமான 43 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ரொக்கம் மற்றும் விலைமதிக்கத்தக்க பொருட்களை கொள்ளையிட்டதாக இரண்டு மலேசியர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 வயது கோ பூன் டோங் மற்றும் 28 வயது முகமது தௌபீக் அஹ்மத் பௌஸிஎன்ற அந்த இரண்டு மலேசியர்கள், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிங்கப்பூர், DUNEARN அருகில் உள்ள KING ALBERT PARK HOUSE என்ற இடத்தில் இக்கொள்ளையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிங்கப்பூரில் கொள்ளையிட்டப் பின்னர் தப்பிவிட்ட எஞ்சிய நபர்களை பிடிப்பதற்கு மலேசிய போலீசாரின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News