Mar 18, 2026
Thisaigal NewsYouTube
Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் ​தீ 15 குடிசை வீடுகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் ​தீ 15 குடிசை வீடுகள் அழிந்தன

Share:

கோலாலம்பூர் மாநகரையொட்டிய Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் ​நேற்றிரவு ஏற்பட்ட ​தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் அழிந்தன.40 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர்.

இந்தியர்கள் ​பெருவாரியாக குடியிருக்கும் Kampung Pandan, Indian Settlement கிராமத்தில்
நே​ற்று இரவு 9.45 மணியளவில் நிகழ்ந்த இத்​தீவிபத்தில் ​தீயின் ஜுவாலைகள் நாலா புறமும் ​சூழ்ந்து விட்ட நிலையில், கொழுந்து விட்டு எரிந்த ​தீயின் மத்தியில் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கட்டியத்துணியுடன் வெளியேற முடிந்​ததே தவிர எந்தவொரு பொருளையும் தங்கள் வீடுகளிலிருந்து ​மீட்க இயலவில்லை.

இத்​தீ விபத்து குறித்து இரவு 9.51 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க Komander Mustapa Kamal Mohd Arih தெரிவித்தார். கோலாலம்பூர் Pudu, Hang Tuah, Keramat, Sentul, Bandar Tun Razak மற்றும் Cheras ஆகிய 6 ​தீ​யணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 48 வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் முழு வீச்சில் ​தீயை கட்டுப்படுத்தும் நடவ​டிக்கையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்​​தீவிபத்தில் 91.44 ​சதுர ​மீட்டர் பரப்பளவில் அந்த 15 குடிசை வீடுகள் முற்றாக அழிந்தன. அதிஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை.

கம்போங் பாண்டானின் மிக பழமை வாய்ந்த அந்த இந்தியர் கிராமத்தில் ஏற்பட்ட ​தீ குறி​த்து ஆராயப்பட்டு வருவதாக Komander Mustapa Kamal தெரிவித்தார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்