May 22, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு மகளிர் அமைப்பு ஒன்று அனுமதி கோரி, சமர்ப்பித்ததாக கூறப்படும் விண்ணப்பத்தை போலீஸ் துறை நான்கு முறை நிராகரித்து விட்டதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மஜிட் மறுத்துள்ளார்.

வூமன்ஸ் மார்ச் மலேசியா என்ற மகளிர் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸ் தொடர்பான பாரத்தில் 14 கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்காததாலும், பூர்த்தி செய்யப்படாததாலும் அந்த விண்ணப்பம் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக டத்தோ அலாவூதின் குறிப்பிட்டார்.

எனினும் அதன் பின்னர் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பித்தாக கூறப்படுவது தங்களுக்கு தெரியாது என்று டத்தோ அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

Related News