Jul 27, 2026
Thisaigal NewsYouTube
APMM கடற்கொள்ளையர்கள் ஐவரை கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

APMM கடற்கொள்ளையர்கள் ஐவரை கைது செய்துள்ளது

Share:

கோத்தா திங்கி, ஏப்ரல் 15-

ஜொகூர்பாரு கடற்பரப்பில் பழைய உலோகங்களை ஏற்றி செல்லும் இழுவைப்படகு உட்பட விசைப்படகு ஆகியவற்றை கொள்ளையடிக்க முயன்ற ஐந்து இந்தோனேசியர்கள் பிடிப்பட்டனர்.

நேற்று காலை 10.45 மணியளவில் போங்கவான் 9 மற்றும் ஹெக்ஸாகிறோ 8 ஆகிய படகுகளில் உள்ள சரக்குகள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்க முற்படுவதாக ஜொகூர் துறைமுக ஆணையத்திடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் தஞ்சுங் செடிளி கடல்சார் மண்டலத்தின் கொமாண்டர் மோஹட் நஜிப் தெரிவித்தார்.

படகில் தப்பிச் செல்ல முற்பட்ட 31 முதல் 53 வயதுடைய இந்தோனேசிய கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக மோஹட் நஜிப் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் உலோகத்தை கொள்ளையடித்து அண்டை நாடுகளுக்கு கடல்வழியாக செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 380 மற்றும் குடிநுழைவு சட்டம் 6 (1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு கைது செய்யப்பட்ட அந்நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவதாக மோஹட் நஜிப் மேலும் தகவலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்