May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பெர்சாத்து விடமிருந்து இன்னும் நோட்டிஸ் ஏதும் பெறப்படவில்லை
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பெர்சாத்து விடமிருந்து இன்னும் நோட்டிஸ் ஏதும் பெறப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவை வழங்கியதற்காக, பெர்சாத்து கட்சியிடமிருந்து தாம் இதுவரையில் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை என புக்கிட் கன்த்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நோட்டீஸ் கிடைக்காத வரையில், தமது தொகுதியை காலி செய்வது தொடர்பில், ஏதும் கருத்துரைக்க போவதில்லை என பெரித்தா ஹரியானிடம் அவர் கூறினார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோரசாலி இட்ரிஸ்-சிடம் வினவப்பட்ட போது, அவர் அனைத்து தரப்பினரும் பொறுமைக் காக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கு முன்பு, பிரதமருக்கு ஆதரவளித்திருந்த பெர்சாத்துவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தகுதியை இழக்காமலிருக்க, அவர்களின் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, எதிர்தரப்பினருக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியை உடனடியாக இழக்க செய்யும் வகையில், பெர்சாத்துவின் சட்டத்திருத்தத்தை தேசிய சங்கப் பதிவகம் அங்கீகரித்ததை அடுத்து, ரசாலி இட்ரிஸ் அக்கூற்றை முன்வைத்திருந்தார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்