தாம் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நீதிமன்ற கட்டடத்தின் பெட்டகத்தை உடைத்து பணத்தை களவாடிய குற்றத்திற்காக காவலாளி ஒருவருக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறை மற்றும் 3,500 வெள்ளி அபராதம் விதித்தது.
25 வயதுடைய பி.போல் அகிலன் என்ற அந்த பாதுகாவலர் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா மாநில நீதிமன்ற கட்டட வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற பெட்டகத்திலிருந்து 800 வெள்ளி ரொக்கத்தை அவர் திருடியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. மது பானம் வாங்குவதற்கு பணம் இல்லை என்ற காரணத்தினால் தாம் பணியாற்றிய நீதிமன்ற கட்டத்திலேயே அந்த நபர் கன்னம் வைத்ததாக இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்


