May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

கோலாலம்பூர், ஜாலான் அம்ப்பாங்- கில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த ஆடவரின் தடுப்புக்காவலை, நீட்டிப்பதற்கு விண்ணப்பம் செய்யப்படும் என்று போலீஸ் படைத்தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்துள்ள ஷாலோம் ஆவிதான் என்று அடையாளம் கூறப்பட்ட 38 வயதுடைய அந்த இஸ்ரேலிய ஆடவரின் தடுப்புக்காவலுக்கான காலக்கெடு, நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படும் முதன்மை சந்தேகப்பேர்வழியான அந்த இஸ்ரேலிய ஆடவர், கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே நபர், எதற்காக தன் வசம் ஆறு துப்பாக்கிகளையும், 200 தோட்டாக்களையும் வைத்திருந்தார் என்பதற்கான காரணத்தை போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருவதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியோகித்த ஒரு தம்பதியர் உட்பட இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஐஜிபி மேலும் விளக்கினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு